sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சவாரிக்கு அழைத்து சென்று ஆட்டோ திருடியோர் கைது

/

 சவாரிக்கு அழைத்து சென்று ஆட்டோ திருடியோர் கைது

 சவாரிக்கு அழைத்து சென்று ஆட்டோ திருடியோர் கைது

 சவாரிக்கு அழைத்து சென்று ஆட்டோ திருடியோர் கைது


ADDED : மார் 21, 2026 10:22 PM

Google News

ADDED : மார் 21, 2026 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்: சவாரிக்கு அழைத்து சென்று, ஆட்டோவை திருடிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சையது அகமது, 55; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 8ம் தேதி, மாதவரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, இரு வாலிபர்கள் கொடுங்கையூர் செல்ல வேண்டும் எனக்கூறி, ஆட்டோவில் ஏறினார்.

கொடுங்கையூர், குப்பைமேடு எடைமேடை அருகே வந்து இறங்கி, காசு கொடுப்பது போல் பேசி கொண்டே ஒருவர் நடந்து சென்றார். அவரிடம் பணம் வாங்குவதற்கு சையது அகமது, ஆட்டோவில் இருந்து இறங்கிய நேரத்தில், மற்றொரு நபர், ஆட்டோவை திருடி வேகமாக ஓட்டி சென்றார். சையது அகமது சுதாரிப்பதற்குள், அவரிடம் பேசிக்கொண்டிருந்த நபர், சையது அகமதுவின் சட்டை பாக்கெட்டில் இருந்த 1,000 ரூபாயை திருடி தப்பினார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, பழைய குற்றவாளிகளான திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி கணேஷ், 25, தண்டையார்பேட்டை சந்தோஷ், 18 ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us