/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வையற்ற மாணவர்கள் விழிப்புணர்வு
/
பார்வையற்ற மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : நவ 06, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லியில், தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனம் அமைந்துள்ளது.
இங்கு, சர்வதேச வெண்கோல் தினத்தை முன்னிட்டு, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பார்வையற்றவர்கள் சாலைகளிலும், பொது இடங்களிலும் இயல்பாக நடமாட பயன்படுத்தும் வெண்கோல் குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், 150க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்று, வெண்கோல்களுடன் நேற்று பூந்தமல்லியில் பேரணியாக நடந்து சென்றனர்.

