sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குப்பை கிடங்கில் குழந்தை

/

குப்பை கிடங்கில் குழந்தை

குப்பை கிடங்கில் குழந்தை

குப்பை கிடங்கில் குழந்தை


ADDED : பிப் 13, 2024 12:41 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், மதுரவாயல், தனலட்சுமி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சிவா, 30; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி அஞ்சலா, 27. இவர்களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது.

நேற்று வீட்டில், குழந்தையை துாங்க வைத்து அஞ்சலா குளிக்க சென்றார். அப்போது, இரண்டு நபர்கள் வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரிப்பது போல, தன் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். அப்போது, தன் உறவினரிடம் குழந்தையை கொடுத்து விட்டதாகவும், பூந்தமல்லியில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் சொன்ன முகவரி குறித்து விசாரித்தபோது, அப்படி யாரும் இல்லை என தெரியவந்தது. தொடர் விசாரணையில், குழந்தை இறந்து விட்டதால், பெருங்குடியில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதாக முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அப்பெண்ணையும் அழைத்து, பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் போலீசார் குழந்தையை தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை குப்பை தொட்டியில் வீசினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us