sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்

/

காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்

காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்

காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்


ADDED : ஜன 30, 2024 12:14 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு

காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் இருப்பதாக, அங்குள்ள கூலித் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

பண்டிகை நாட்களில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்து சற்று அதிகமாய் இருந்தது. இதனால் காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் விற்பனையாகின.

அதன்பின், எப்போதும் போல் வியாபாரம் நடந்தது. இதனால் காய்கறிகள், பழங்களின் விற்பனை மந்த கதியில் இருந்ததால், அவை அழுகிப் போயின.

வேறு வழியின்றி, கோயம்பேடு சந்தை வளாகத்தில் உள்ள ஓரிடத்தில், அழுகிப்போன காய்கறிகள், பழங்களை குப்பையாகக் கொட்டி வைத்துள்ளனர்.

இவை, மேலும் அழுகிய நிலையில் இருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு வரும் பொதுமக்கள், வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களுக்கு நோய் பரவும் சூழல் நிலவுகிறது.

இப்பகுதியில் தினமும் குவியும் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை, உடனடியாக அகற்றுவதில்லை.

குப்பை சேரும்போதே அகற்றினால், துர்நாற்றம் வீசாது. கோயம்பேடு சந்தை வளாகமும் சுகாதாரமாக இருக்கும். எனவே, கோயம்பேடு சந்தையில் கொட்டப்பட்டுள்ள காய்கறிகள், பழங்களின் குப்பையை உடனடியாக அகற்ற, வியாபாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us