sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.43 லட்சம் மோசடி

/

 வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.43 லட்சம் மோசடி

 வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.43 லட்சம் மோசடி

 வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.43 லட்சம் மோசடி


ADDED : நவ 20, 2025 03:12 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர்: வங்கியில், 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத்தருவதாக கூறி, 43.10 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்தவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர், ஒற்றைவாடை தெரு பகுதியை சேர்ந்தவர் முரளி புருஷோத்தம்மன், 40. இவர், தி.நகரில் 'பிரதீப் குயின்ஸ் ஹாலிடே ரிசார்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொழில் வளர்ச்சிக்காக பணம் தேவைப்பட்டதால், தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆனந்த்ராஜ், 42, என்பவரை அணுகியுள்ளார். அவர், 3 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு கமிஷனாக, 43.10 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய முரளி புருஷோத்தம்மன், 43.10 லட்சம் ரூபாயை ஆனந்த்ராஜ் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், சொன்னபடி வங்கி கடன் பெற்றுத்தரவில்லை. அதனால், கொடுத்த கமிஷன் பணத்தை முரளி புருஷோத்தம்மன் திரும்ப கேட்டுள்ளார். ஆனால், தர முடியாது எனக்கூறி ஆனந்த்ராஜ் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, புளியந்தோப்பு துணை கமிஷனரிடம் முரளி புருஷோத்தம்மன் புகார் அளித்தார். அதன்படி, திரு.வி.க., நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us