sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓ.எம்.ஆரில் வழிப்பறி செய்ய திருமுல்லைவாயிலில் பைக் திருட்டு

/

ஓ.எம்.ஆரில் வழிப்பறி செய்ய திருமுல்லைவாயிலில் பைக் திருட்டு

ஓ.எம்.ஆரில் வழிப்பறி செய்ய திருமுல்லைவாயிலில் பைக் திருட்டு

ஓ.எம்.ஆரில் வழிப்பறி செய்ய திருமுல்லைவாயிலில் பைக் திருட்டு


ADDED : நவ 29, 2024 12:31 AM

Google News

ADDED : நவ 29, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, 24. கடந்த 20ம் தேதி, ஓ.எம்.ஆர்., குமரன்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தினேஷ்பாபுவின் மொபைல் போனை பறித்து சென்றனர்.

அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், அது 'பல்சர்' வாகனம் என்பதும், திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடையது என்பதையும் செம்மஞ்சேரி போலீசார் அறிந்தனர். மேலும், அந்த வாகனம் திருடுபோனதாக, 15ம் தேதி, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் வாலிபர் புகார் அளித்ததும் தெரிந்தது.

இதையடுத்து, கேமராவில் பதிவான இருவரின் அங்க அடையாளங்களை வைத்து விசாரித்ததில், சோழிங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்த அசோக், 25, அஜித்குமார், 24, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று, இருவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

தீவிர விசாரணையில், சோழிங்கநல்லுாரில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட, 40 கி.மீ., துாரத்தில் உள்ள திருமுல்லைவாயில் சென்று, பைக் திருடி வந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us