ADDED : டிச 04, 2024 12:49 AM
அ நிறம் | அளவு
பம்மல், குரோம்பேட்டை, பாரதி புரத்தை சேர்ந்தவர் சதீஷ், 45. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., பிரசார பிரிவு தலைவர். இவர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் திராவிடம் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறாக பதிவிட்டதாக, தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ரவிச்சந்திரன், தாம்பரம் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷை நேற்று காலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
