/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மா.செ., கார் நொறுக்கிய விவகாரம் பா.ஜ., நிர்வாகியின் பதவி பறிப்பு
/
மா.செ., கார் நொறுக்கிய விவகாரம் பா.ஜ., நிர்வாகியின் பதவி பறிப்பு
மா.செ., கார் நொறுக்கிய விவகாரம் பா.ஜ., நிர்வாகியின் பதவி பறிப்பு
மா.செ., கார் நொறுக்கிய விவகாரம் பா.ஜ., நிர்வாகியின் பதவி பறிப்பு
ADDED : டிச 28, 2025 05:06 AM
குன்றத்துார்: பா.ஜ., மாவட்ட செயலர் கார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில், மற்றொரு பா.ஜ., நிர்வாகியின் பதவியை பறித்து, கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை அருகே, குன்றத்துார் அடுத்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி, 50 ; காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., பொதுச்செயலர். இவர், மத்திய அமைச்சர் முருகனின் ஆதரவாளர்.
செல்வமணிக்கும், மணிமங்கலத்தைச் சேர்ந்த பா.ஜ., மாநில இளைஞரணி துணை தலைவராக பதவி வகிக்கும் அமர்நாத், 32, என்பவருக்கும், கட்சி ரீதியாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பா.ஜ., தலைமை வழங்கிய பணத்தை செல்வமணி முறையாக பிரித்து கொடுக்காமல் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமர்நாத், இம்மாதம் 25 ல் செல்வமணியிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அன்று இரவு, அமர்நாத்தின் ஆதரவாளரான மணிமங்கலம் அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த குன்றத்துார் ஒன்றிய பா.ஜ., பொருளாளர் பிரகாஷ், 28, மற்றும் அவரது நண்பர்கள் என ஐந்து பேர், செல்வமணி வீட்டிற்கு மது போதையில் சென்று, வீட்டில் இருந்த கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
வழக்கு பதிந்த மணிமங்கலம் போலீசார், பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் அமர்நாத்தை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால், அமர் நாத் வகித்து வரும் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என, பா.ஜ., இளைஞர் அணி மாநில தலைவர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அமர்நாத், நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு வழங்கிய பணத்தை, செல்வமணி எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து நான், 'கட்சி வழங்கிய பணம் செல்வமணியிடம் உள்ளது, அதை முகவர்கள் வாங்கி கொள்ளலாம் என, 'வாட்ஸாப்' குழுவில் பதிவிட்டேன். செல்வமணி வீட்டில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும், எந்த தொடர்பும் இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.

