ADDED : ஜன 05, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:வியாசர்பாடி, ராமலிங்கம் கோவில் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில், கோணிப்பை சுற்றிய நிலையில், முழுமையடையாத சிசுவின் சடலம் இருப்பதாக, அப்பகுதிவாசிகள், வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து, கோணிப்பையில் சுற்றி இருந்த 7 மாத ஆண் சிசுவின் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசார் விசாரிக்கின்றனர்.