/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹோட்டல் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
/
ஹோட்டல் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
ADDED : அக் 05, 2024 12:22 AM
சென்னை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில், அருணா ஹோட்டல் உள்ளது.
இந்த ஹோட்டலுக்கு, தமிழக துணை முதல்வர் மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில், நேற்று முன்தினம் இரவு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நுங்கம்பாக்கம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், ஹோட்டலில் சோதனை செய்தனர்.
அதேபோல, மந்தைவெளி, ஆர்.கே.,நகர், 4வது தெருவில் உள்ள செட்டிநாடு ஹரிஷ் வித்யாலயா பள்ளிக்கு, நேற்று மதியம் 2:00 மணிக்கு, நடிகர் எஸ்.வி.சேகர் பெயரில் இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இரு இடங்களிலும் வெடி பொருள் கிடைக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.