ADDED : அக் 09, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, ஐ.ஐ.டி.,வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளிக்கு, நேற்று காலை 9:30 மணியளவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் பெயரில் இ-மெயிலின் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் பைரவா உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் இரண்டு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். எந்தவித வெடிப் பொருளும் இல்லாததால், வெறும் புரளி என்பது தெரியவந்தது. கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.