sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

/

உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஜூன் 10, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுதும் மோப்ப நாய் உதவியுடன், போலீசார் சோதனை நடத்தினர்.

சமீப காலமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கு, நேற்று மாலை 4:59 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது.

அதில், 'உயர் நீதிமன்ற வளாகம், சி.பி.ஐ., நீதிமன்ற வளாகம், பசுமை வழி சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வீடு ஆகியவற்றில், மாலை 6:45 மணிக்கு குண்டு வெடிக்கும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுதும், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us