/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் வீடு உட்பட 17 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
முதல்வர் வீடு உட்பட 17 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
முதல்வர் வீடு உட்பட 17 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
முதல்வர் வீடு உட்பட 17 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 18, 2025 04:52 AM
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு உட்பட, 17 இடங்களுக்கு இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு இ - மெயில் ஒன்று வந்தது.
அதில், கிண்டி கவர்னர் மாளிகை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, எஸ்.பி.பி.சரண், செஸ் வீரர் பிரக்யானந்தா, பா.ஜ., பிரமுகர் திருப்பதி நாராயணன் வீடு, சென்னை ஏர்போர்ட், அண்ணா பல்கலை, அமலாக்கத்துறையின் சி.ஆர்.பி.எப்., அலுவலகம் உள்ளிட்ட, 17 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் முகவரியை பயன்படுத்தி, அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

