ADDED : மார் 07, 2026 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: புத்தக வாசிப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில், ஆவடி மாநகராட்சியில், புது முன்னெடுப்பாக புத்தகங்கள் சேகரிப்பு முகாம், வரும் 24ம் தேதி வரை நடக்கிறது.
இதில், மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்பினர் புத்தகங்களை நன்கொடையாக வழங்கலாம்.
இதில், மொழி புத்தகங்கள், தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பங்கள் இல்லாத புத்தகங்கள், சமூக புத்தகங்கள் என, ஒருவர் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் நன்கொடையாக அளிக்கலாம்.
அதிக அளவில் புத்தகங்களை நன்கொடையாக வழங்குவோர், முகாமின் முடிவில் கவுரவிக்கப்படுவர் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

