ADDED : செப் 15, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
முன்னாள் பிரதமர் நேரு, சிறையில் இருந்தபோது எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆங்கில நுாலை, ‘உலக சரித்திரம்’ என்ற தலைப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அழகேசன் மொழிப்பெயர்த்தார்.
இந்த நுால் வெளியீட்டு விழா மற்றும் காங்., மூத்த தலைவர் கோபண்ணா எழுதிய இந்திரா காந்தி அரிய புகைப்பட வரலாறு நுாலின் முன்பதிவு தொடங்க விழா, சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடந்தது. காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் நுாலை வெளியிட, அமைச்சர் ராஜேஷ்குமார் பெற்றுக்கொண்டார். உடன் இடமிருந்து: வி.சி.க., – எம்.பி., ரவிக்குமார், இ.கம்யூ., – எம்.பி., சுப்பராயன், நுாலாசிரியர் கோபண்ணா, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கல்வியாளர் வாமனன். இடம்: ராயப்பேட்டை.
