sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது

/

மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது

மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது

மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது


ADDED : செப் 08, 2025 06:17 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய அலுவலக பெண்கள் உதவி மையத்திற்கு, நேற்று முன்தினம் மாலை அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிரித்தபடியே கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண்ணை வைத்து விசாரித்தனர். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

விசாரணையில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்திருக்கும் சிறுவன், சகோதரரின் மொபைல் போனில் இருந்து பேசியதும், எதிர்முனையில் பெண் ஊழியர் பேசியதால், கிண்டலுக்காக வெடிகுண்டு வைத்திருப்பதாக சிரித்தப்படி கூறி இணைப்பை துண்டித்ததும் தெரிய வந்தது. சிறுவனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us