ADDED : பிப் 03, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்: தனியார் பள்ளி வளாகத்தில் குரங்கு கடித்து, 5 வயது சிறுவன் காயமடைந்தான்.
செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் குரங்கு ஒன்று நுழைந்தது. அது, பள்ளியில் யு.கே.ஜி., படித்து வரும் சிறுவனின் வலது கையில் கடித்துள்ளது.
சிறுவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், நல்லாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாணவரை அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

