தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மொபைல் போன் திருடிய சிறுவன் கைது

மொபைல் போன் திருடிய சிறுவன் கைது

மொபைல் போன் திருடிய சிறுவன் கைது


UPDATED : செப் 05, 2026 09:10 PM

ADDED : செப் 05, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 09:10 PM ADDED : செப் 05, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பூக்கடை:அரசு மாநகரப் பேருந்தில் எஸ்.பி.ஐ.,வங்கி ஊழியரின் மொபைல் போனை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 27. அவர் நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ.,வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்ததில் வழித்தடம் எண், 17 கே பேருந்தில் ஏறி டிக்கெட் எடுப்பதற்காக மொபைல் போனை பார்த்தார்.

போன் திருடு போனது தெரிந்தது. புகார்படி பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில், பூக்கடையைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் போனை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us