ADDED : அக் 15, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூவரசம்பட்டு,
நங்கநல்லுார், வோல்டாஸ் காலனியை சேர்ந்தவர் மணவாளன், 67. கொத்தனார். இவர், கடந்த 10ம் தேதி, கட்டுமானப் பணிக்காக மூவரசம்பட்டு பிரதான சாலை, பரங்கிமலை- - மேடவாக்கம் சந்திப்பை கடக்க முயன்றார்.
அப்போது, மூவரசம்பட்டு, பஜ னை கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல், 52, என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மணவாளன் மீது மோதியது. இதில், தலையில் காயமடைந்த அவர், நங்கநல்லுாரில் உள் ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, அவர் இறந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.