sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டுமான இடத்தில் கொத்தனார் பலி

/

கட்டுமான இடத்தில் கொத்தனார் பலி

கட்டுமான இடத்தில் கொத்தனார் பலி

கட்டுமான இடத்தில் கொத்தனார் பலி


ADDED : ஜூலை 18, 2025 12:09 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை,தனியார் பள்ளி கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில கொத்தனார், மின்சாரம் தாக்கி பலியானார்.

மேற்கு வங்க மாநிலம், மணிப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாகயாதார்கோனை, 40; கொத்தனார். இவர், அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பணியில் இருந்தபோது, தவறுதலாக சுவரில் இருந்த மின்சார ஒயரில் கை பட்டு, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.

மயங்கி கிடந்த அவரை, அங்கிருந்த மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 1:50 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us