sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவம் ஆற்றில் மேம்பால பணி துவக்கம்

/

கூவம் ஆற்றில் மேம்பால பணி துவக்கம்

கூவம் ஆற்றில் மேம்பால பணி துவக்கம்

கூவம் ஆற்றில் மேம்பால பணி துவக்கம்


ADDED : பிப் 26, 2024 01:11 AM

Google News

ADDED : பிப் 26, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்:மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே திருவேற்காடு, அடையாளம்பட்டு, மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு மழைக்காலத்திலும், கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, தரைப்பாலங்கள் மூழ்கி, சுற்றுப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

சென்னையில் கடந்த 2022 நவம்பர் -- டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலங்கள் மூழ்கின. இதையடுத்து, மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், இரண்டு இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.

அதன்படி, நொளம்பூர் யூனியன் சாலை, சன்னதி முதல் குறுக்கு தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 31.65 கோடி ரூபாய் மதிப்பிலும்; சின்ன நொளம்பூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 42.71 கோடி ரூபாய் மதிப்பிலும், இரு மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதில், சின்ன நொளம்பூரை இணைக்கும் மேம்பால பணிகள் 40 சதவீதம் முடிந்துள்ளன.

ஆனால், நொளம்பூர் யூனியன் சாலை மற்றும் சன்னதி முதல் குறுக்கு தெரு வழியாக அமைய உள்ள மேம்பால பணி, நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாமதமானது.

தற்போது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேம்பாலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கப்பட்டு, வேகமாக நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us