ADDED : அக் 06, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர், மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார், 42. இதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு, குடும்பத்தினர் சென்றுள்ளனர். சரவணகுமாரும் அவரது பெற்றோரும் நள்ளிரவு வீடு திரும்பினர். கதவு திறந்திருந்தது. உள்ளே சென்ற போது மர்மநபர்கள் இருவர் வீட்டிலிருந்து வெளியே தப்பினர்.
பீரோவில் வைத்திருந்த 24 சவரன் நகை காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து செம்பியம் காவல்நிலையத்தில் சரவணகுமார் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.