ADDED : ஜூன் 13, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர், கண்ணகி நகர், எழில் நகரைச் சேர்ந்தவர் மருது பாண்டியன், 30. கடந்த 10ம் தேதி குடும்பத்துடன் சிதம்பரத்தில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று, நேற்று வீடு திரும்பினார்
. அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, மர பீரோவை உடைத்து, அதில் இருந்த ஒரு சவரன் நகை, 5,000 ரூபாய் மற்றும் காமாட்சி குத்து விளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.