sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் பயணியரை காப்பாற்றி உயிரைவிட்ட ஓட்டுனர்

/

பஸ் பயணியரை காப்பாற்றி உயிரைவிட்ட ஓட்டுனர்

பஸ் பயணியரை காப்பாற்றி உயிரைவிட்ட ஓட்டுனர்

பஸ் பயணியரை காப்பாற்றி உயிரைவிட்ட ஓட்டுனர்


ADDED : நவ 21, 2024 12:37 AM

Google News

ADDED : நவ 21, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துாரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 47; மாநகர பஸ் டிரைவர். இவர் நேற்று, சுங்குவார்சத்திரத்தில் இருந்து, பூந்தமல்லிக்கு நோக்கி வழித்தடம் எண்:578 பேருந்தில், 30க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிச் சென்றார்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே சென்றபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சு வலி ஏற்படுவதை உணர்ந்த ஸ்ரீதர், லாவகமாக பேருந்தினை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, மயங்கினார். பயணியர் சிலர் அவரை மீட்டு, அவசர ஆம்புலன்ஸ் வாயிலாக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழக்கும் தருவாயிலும், தன்னை நம்பி வந்த பயணியரின் உயிரை காப்பாற்றிய டிரைவர் ஸ்ரீதரின் செயல், பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.






      Dinamalar
      Follow us