/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோவில் மோதிய சரக்கு வேன்: இருவர் பலி
/
ஆட்டோவில் மோதிய சரக்கு வேன்: இருவர் பலி
ADDED : அக் 03, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், ஆட்டோவில் சரக்கு வேன் மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.
சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்த ஐ.சி.எம்.ஆர்., அருகே நேற்று மாலை 4:00 மணியளவில், பயணியர் ஆட்டோவும் டாடா ஏஸ் சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் வந்த இருவர் உயிரிழந்தனர்.
புல்லரம்பாக்கம் போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகந்நாதன், 30, ஜெயபிரகாஷ், 30 ஆகியோர் என தெரிந்தது. விபத்து ஏற்படுத்திய சரக்கு வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.