/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணம் வைத்து சூதாட்டம் 6 பேர் மீது வழக்கு
/
பணம் வைத்து சூதாட்டம் 6 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 13, 2024 12:36 AM
கொடுங்கையூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்ற போது, கொடுங்கையூர், தென்றல் நகரைச் சேர்ந்த முத்து, 40, எருக்கஞ்சேரி, முனியாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பரசுராமன், 47, எருக்கஞ்சேரி, பாப்பாத்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செபஸ்டின், 59, பெரம்பூர், அவ்வையார் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்த அபிபுல்லா, 57, செங்குன்றம், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த அறிவழகன், 40, சுந்தர், 62, ஆகிய ஆறு பேர், பணம் வைத்து சூதாடியது தெரிந்தது.
போலீசார், இவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.