/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை மொபைல் போனில் படமெடுத்த தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
/
பெண்ணை மொபைல் போனில் படமெடுத்த தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
பெண்ணை மொபைல் போனில் படமெடுத்த தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
பெண்ணை மொபைல் போனில் படமெடுத்த தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : அக் 14, 2024 03:25 AM

திருத்தணி,:திருத்தணி ரயில் நிலையம் எதிரே உள்ள செங்கல்வராயன் செட்டி தெருவில் வசிப்பவர் பாஸ்கர் மனைவி ராதா, 42. தம்பதிக்கு பாலசந்தர், 22, அருண்குமார், 20, ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பாஸ்கர் இறந்து விட்டார்.
நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில், ராதா தன் மகன் பாலசந்தருடன் ம.பொ.சி., சாலையிலுள்ள மருந்தகத்திற்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த திருத்தணி நகராட்சி 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அசோக்குமார், 42, என்பவர், தன் மொபைல் போனில், ராதாவை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த ராதாவின் மகன் பாலசந்தர், கவுன்சிலர் அசோக்குமாரிடம், வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும் ஆத்திரமடைந்த பாலசந்தர், கையால் அசோக்குமாரின் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். கவுன்சிலரும் பாலசந்தரை தாக்கியுள்ளார். தகவல் அறிந்ததும், ராதாவின் இளைய மகன் அருண்குமாரும் வந்து, கவுன்சிலரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து கவுன்சிலர் தன் ஆதரவாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவிக்க, இரு கவுன்சிலர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் வந்து, ராதா மற்றும் அவரது மகன்களை தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து வந்த திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
காயமடைந்த கவுன்சிலர் அசோக்குமார், அருண்குமார், பாலசந்தர் ஆகிய மூவரையும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராதா அளித்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, கவுன்சிலர் அசோக்குமார் உட்பட 30 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.