sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நான்கு பெண்கள் மீது வழக்கு

/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நான்கு பெண்கள் மீது வழக்கு

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நான்கு பெண்கள் மீது வழக்கு

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நான்கு பெண்கள் மீது வழக்கு


ADDED : செப் 19, 2025 12:32 AM

Google News

ADDED : செப் 19, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை, சரமாரியாக தாக்கிய நண்பரின் உறவினர்களான நான்கு பெண்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேளச்சேரி, காந்தி சாலையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 43. ஆட்டோ ஓட்டுநர். இவர், தன் நண்பரான மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரின்ஸ் சார்லஸ் என்பவருக்கு, 30,000 ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.

அந்த பணத்தை கொடுத்து ஓராண்டாகியும், பிரின்ஸ் சார்லஸ் திருப்பி தராததால், இரண்டு நாட்களுக்கு முன் மாடம்பாக்கம் சென்ற ராஜேஷ்குமார், பணம் குறித்து கேட்டு உள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவரும் மொபைல் போனில் சண்டையிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பெண்கள், வீட்டில் இருந்த ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கி, உதைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

பலத்த காயமடைந்த ராஜேஷ்குமார், கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி, நான்கு பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீசார், சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us