sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

/

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு


ADDED : அக் 20, 2025 04:34 AM

Google News

ADDED : அக் 20, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றக்கோரிய போக்குவரத்து போலீஸ்காரரை, தாக்கிய காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, அண்ணா சாலை ஐ.ஓ.பி., வங்கி எதிரே உள்ள 'ஹீரோ' ஷோரூம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக 'டொயோட்டா பார்ச்சூனர்' என்ற சொகுசு கார் நேற்று முன்தினம் மதியம் நிறுத்தப்பட்டிருந்தது.

காரை அங்கிருந்து அகற்றுமாறு, அண்ணா சாலை போக்குவரத்து காவல் நிலைய போலீஸ்காரர் பிரபாகரன், 35, என்பவர் கூறியுள்ளார். அப்போது, காரில் இருந்த மயிலாடுதுறை காங்., - எம்.எல்.ஏ., ராஜகுமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போலீஸ்காரர் பிரபாகரனை தாக்கினார்.

இது குறித்து, விசாரித்த அண்ணா சாலை போலீசார், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், எம்.எல்.ஏ., ராஜகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us