sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அண்ணாநகர் சிறுமி சித்ரவதை களத்தில் இறங்கிய சி.பி.ஐ.,

/

அண்ணாநகர் சிறுமி சித்ரவதை களத்தில் இறங்கிய சி.பி.ஐ.,

அண்ணாநகர் சிறுமி சித்ரவதை களத்தில் இறங்கிய சி.பி.ஐ.,

அண்ணாநகர் சிறுமி சித்ரவதை களத்தில் இறங்கிய சி.பி.ஐ.,


ADDED : அக் 04, 2024 12:15 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். பின், அந்த புகார் மீது விசாரணை என்ற பெயரில், சிறுமியின் பெற்றோரை அலைக்கழித்துள்ளனர்.

சிறுமியை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்குள்ள மின்துாக்கி அருகே வாக்குமூலம் பெற்று, அதை வீடியோ எடுத்து இணையத்திலும் வெளியிட்டுள்ளனர்.

சிறுமியின் தாய் நடத்தை மீது அவதுாறு பரப்பியும், தந்தை கொத்தனார் தொழில் செய்வதாக கூறியதால், பின் பக்கத்திலும் அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார், பாலியல் தொல்லை வழக்கில் நடைமுறைகளை பின்பற்றி உள்ளனரா, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் அளித்து, இயல்பு நிலைக்கு வந்தவுடன் பாதுகாப்பான இடத்தில் வாக்குமூலம் பெற்றனரா, சிறுமியிடம் விசாரிக்கும் போது சீருடையில் இருந்தனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us