ADDED : ஜூன் 18, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர், சுப்பிரமணி. இவரது மனைவி கிரிஜா, 63. இவர் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டூ - வீலரில் வந்த மர்ம நபர், அவரிடம் குடிக்க தண்ணீர்
கேட்டுள்ளார். தண்ணீர் கொடுத்து திரும்பும்போது, அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு டூ - வீலரில் தப்பி சென்றார். இந்த சம்பவத்தால், மாதர்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.