sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூந்தமல்லி நகராட்சியில் தலைவர் - கமிஷனர் தகராறு

/

பூந்தமல்லி நகராட்சியில் தலைவர் - கமிஷனர் தகராறு

பூந்தமல்லி நகராட்சியில் தலைவர் - கமிஷனர் தகராறு

பூந்தமல்லி நகராட்சியில் தலைவர் - கமிஷனர் தகராறு


ADDED : பிப் 01, 2024 12:38 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில், புத்தாண்டின் முதல் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் லதா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, முற்பகல் 11:00 மணியளவில், மக்கள் பிரச்னை மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்கு, நகராட்சி தலைவர் காஞ்சனா அனுமதி அளித்தார்.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், 'நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களின் கணவர்கள் அனுமதிக்கப்பட்டதால், அதிகாரிகள் வெளியே சென்று விடுவோம்' எனக் கூறினர்.

இதனால், நகராட்சி கமிஷனர் லதா மற்றும் காஞ்சனா சுதாகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'உறுப்பினர்களின் கணவர்களை அனுமதிக்கக் கூடாது' என, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டது.

அவர்கள் வெளியேற்றப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் உறுப்பினர்கள் உட்பட அனைவரும், கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தி மீண்டும் கூட்டத்தை நடத்தினார்.






      Dinamalar
      Follow us