sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெட்ரோ ரயில் சேவையில் வரும் 15 முதல் மாற்றம்

/

மெட்ரோ ரயில் சேவையில் வரும் 15 முதல் மாற்றம்

மெட்ரோ ரயில் சேவையில் வரும் 15 முதல் மாற்றம்

மெட்ரோ ரயில் சேவையில் வரும் 15 முதல் மாற்றம்


ADDED : செப் 12, 2025 02:38 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேலே நடந்து வரும் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணி காரணமாக, பச்சை வழித்தடத்தில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டுள்ளது.

கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, வரும் 15 முதல் 19ம் தேதி வரை தற்காலிகமாக மாற்றி அமைக்கப்படுகிறது.

காலை 5:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, பரங்கிமலை - அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை 14 நிமிடங்கள்; விமான நிலையம் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளி; சென்ட்ரல் - கோயம்பேடு இடையே ஏழு நிமிட இடைவெளியில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை, மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். இந்த நேரத்தில் பயணியர் வசதிக்காக, கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். காலை 6:00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும்.

விம்கோ நகர் - சென்ட்ரல் - விமான நிலையம் தடத்தில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us