/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கல்பட்டு - காக்கிநாடா ரயில்கள் ரத்து
/
செங்கல்பட்டு - காக்கிநாடா ரயில்கள் ரத்து
ADDED : பிப் 22, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தெற்கு ரயில்வே, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - ஆந்திரா மாநிலம் காக்கிநாடா போர்ட், மாலை 4:00 மணி விரைவு ரயில், ஜூன் 23 முதல் ஆக., 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு, மாலை 4:30 மணி விரைவு ரயில், வரும் ஜூன் 24 முதல் ஆக., 11ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.