/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் மழையால் போட்டி ஒத்திவைப்பு
/
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் மழையால் போட்டி ஒத்திவைப்பு
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் மழையால் போட்டி ஒத்திவைப்பு
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் மழையால் போட்டி ஒத்திவைப்பு
ADDED : அக் 28, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உலக அளவில் முன்னணி வீராங்கனையர் பங்கேற்கும், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் ஆதரவுடன் 2வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், நேற்று துவங்கு வதாக இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில், முதல் நாளில் தமிழக நட்சத்திர வீராங்கனை வைஷ்ணவியின் போட்டி உட்பட அனைத்து போட்டிகளும், நேற்று பெய்த மழையால் ரத்து செய்யப்பட்டன. இப்போட்டிகள், இன்று மதியம் 12:00 மணிக்கு நடத்தப்படும் என, அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

