/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்கிறார் முதல்வர்
/
மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்கிறார் முதல்வர்
ADDED : மே 31, 2025 03:12 AM
சென்னை,:சென்னையில் மின்சார பஸ்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் வரும் 3ம் தேதி துவங்கி வைக்க உள்ளார்.
பயணியர் தேவையை போக்கும் வகையில், தனியார் பங்களிப்போடு சென்னையில், 1,100 மின்சார தாழ்தள பஸ்களை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
முதற்கட்டமாக, 500 தனியார் மின்சார பஸ்களை இயக்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து, தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதுவரையில், 'ஏசி' வசதியுள்ள, 'ஏசி' வசதி இல்லாத 100க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள், சேவை அளிக்க தயாராக பெரும்பாக்கம், வியாசர்பாடி பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கு பஸ்களுக்காக, பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதல்கட்டமாக 120 மின்சார பஸ்களை, முதல்வர் ஸ்டாலின் வரும் 3ம் தேதி துவங்கி வைக்கிறார். மற்ற மின்சார பஸ்களும் படிப்படியாக துவங்கி வைக்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.