/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியிடம் 'சில்மிஷம்' ஓட்டுனர் கைது
/
மாணவியிடம் 'சில்மிஷம்' ஓட்டுனர் கைது
ADDED : பிப் 21, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:திருவான்மியூரைச் சேர்ந்த 18 வயது கல்லுாரி மாணவி. நேற்று, அடையாறு, வண்ணான் துறை சாலையில், நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த, 45 வயது மதிக்கத்தக்க நபர், மாணவியிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டார்.
பகுதிவாசிகள், அவரை நையபுடைத்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், மந்தைவெளியைச் சேர்ந்த ஓட்டுனரான சீனிவாசன், 45, என தெரிந்தது. போலீசார், சீனிவாசனை கைது செய்தனர்.

