sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எச்சரிக்கை பலகையோடு ஆக்கிரமிப்பு மாநகர பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு

/

எச்சரிக்கை பலகையோடு ஆக்கிரமிப்பு மாநகர பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு

எச்சரிக்கை பலகையோடு ஆக்கிரமிப்பு மாநகர பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு

எச்சரிக்கை பலகையோடு ஆக்கிரமிப்பு மாநகர பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 20, 2025 02:38 AM

Google News

ADDED : ஜன 20, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி:செம்மஞ்சேரி ஆர்ச் சந்திப்பு சாலை, 80 அடி அகலம் கொண்டது. இந்த சந்திப்பில், தி.நகர், கிண்டி, பாரிமுனை போன்ற பகுதிகளில் இருந்து, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் செல்லும் பேருந்துகள் நின்று செல்லும்.

இந்த சாலையில் வடிகால் கட்டிய பின், வாகன நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஆர்ச் சந்திப்பில், பேருந்து ஆட்டோ வளைந்து நிற்கும்.

விபத்துகள் நடந்ததால் 'சாலையோர கடைகள் தடை செய்யப்பட்ட பகுதி' என, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை பலகை வைத்தது.

இதனால், சிறு வியாபாரிகள் கடை நடத்துவதில்லை. ஆனால், வெளி இடங்களில் இருந்து வந்த வணிக நிறுவனங்கள், கொட்டகை அமைத்து, விளம்பரத்துடன் வியாபாரம் செய்கின்றன. இதனால், சாலை அகலம் குறைந்து, மீண்டும் விபத்துகள் அதிகரித்துள்ளன.

மாநகராட்சி வைத்த எச்சரிக்கை பலகையையும் சேர்த்து ஆக்கிரமித்து கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளதால், பேருந்து, ஆட்டோக்கள் சாலையோரம் நிறுத்த முடியாமல், சாலை மையப் பகுதியில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், பாதசாரிகள், இதர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பேருந்து ஓட்டுநர்கள் கேட்டால், போலீஸ் அனுமதியுடன் தான் வைத்துள்ளோம் என, அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us