/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டி
/
மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டி
ADDED : டிச 12, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், மாநகர் அளவிலான முத்தமிழ் வளர்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்பங்கேற்றனர்.
பள்ளியின் செயலர் பெருமாள்சாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர்கார்த்திகா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, வெற்றி பெற்றவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பரிசு வழங்கினார். ஒட்டுமொத்த அளவில் முதலிடம் பிடித்த மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு, சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

