ADDED : ஜன 15, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க முயற்சியில், தாம்பரம் மாநகராட்சி ஈடுபட்டது.
பயன்பாட்டில் இல்லாத பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதை தவிர்க்க, அனைத்து வார்டுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜன., 9 முதல் நேற்று வரை, 28 டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பொருட்கள், மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.