/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை விற்ற கல்லுாரி மாணவர் கைது
/
போதை மாத்திரை விற்ற கல்லுாரி மாணவர் கைது
ADDED : அக் 27, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்,
கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் உள்ள வீட்டில் 'நைட்ரோவிட்' போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சந்தோஷ் என்பவரின் வீட்டில் இருந்த 50க்கும் மேற்பட்ட நைட்ரோவிட் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி, கொடுங்கையூர், காந்தி கரைச் சேர்ந்த சீனிவாசன், 42. திருவள்ளூவர் சாலையைச் சேர்ந்த மூர்த்தி, 20, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த தனியார் கல்லுாரி பி.பி.ஏ., மாணவர் அஜய், 19, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பரத், 20 ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.