/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி
/
பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி
பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி
பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி
ADDED : செப் 03, 2025 12:31 AM
புளியந்தோப்பு, பொக்லைன் வாகனம் ஏறி இறங்கியதில், வணிக வரித்துறை ஓய்வு பெற்ற ஊழியர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புளியந்தோப்பு, கொசப்பேட்டை டோபி காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 70; ஓய்வு பெற்ற வணிக வரித்துறை ஊழியர்.
நேற்றுமுன்தினம் இரவு, புளியந்தோப்பு காவல் நிலையம் எதிரில் சாலையை கடந்து சென்றார். அப்போது, பி.என்.சி., மில் வளாகத்தில் இருந்து, அவ்வழியே வந்த ராட்சத பொக்லைன் வாகனம், சோமசுந்தரம் மீது மோதியது.
இதில், கீழே விழுந்த சோமசுந்தரத்தின் தலையில், வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தப்பியோட முயன்ற, பொக்லைன் டிரைவரை பொதுமக்கள் பிடித்து, புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விபத்து குறித்து, புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
***