/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீட்கப்பட்ட இடத்தில் சமுதாய நலக்கூடம்
/
மீட்கப்பட்ட இடத்தில் சமுதாய நலக்கூடம்
ADDED : மே 16, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டு, அம்பேத்கர் சாலையில் தனியார் பீர் தொழிற்சாலை உள்ளது.
இந்நிறுவனத்தின் வளாகத்தில், 5.5 கிரவுண்ட் ருத்திர பூமி அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை, கடந்த ஆண்டு நவ., மாதம் மீட்கப்பட்டு, அம்பேத்கர் சாலையில் கேட் அமைக்கப்பட்டது.
தற்போது மீட்கப்பட்ட இடத்தில், 7.60 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், கீழ் தளத்தல் பார்க்கிங், முதல் தளத்தில் உணவு கூடம் மற்றும் இரண்டாவது தளத்தில் திருமண மண்டபம் ஆகியவை அமைய உள்ளன.