/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்து நிறுத்தத்தை அகற்றியதால் வில்லிவாக்கத்தில் பயணியருக்கு அவதி
/
பேருந்து நிறுத்தத்தை அகற்றியதால் வில்லிவாக்கத்தில் பயணியருக்கு அவதி
பேருந்து நிறுத்தத்தை அகற்றியதால் வில்லிவாக்கத்தில் பயணியருக்கு அவதி
பேருந்து நிறுத்தத்தை அகற்றியதால் வில்லிவாக்கத்தில் பயணியருக்கு அவதி
ADDED : ஜூலை 16, 2025 12:25 AM
வில்லிவாக்கம், மெட்ரோ ரயில் பாதை பணிக்காக, நாதமுனி பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டதால், வில்லிவாக்கம் பயணியர் கடும் இன்னல்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டம், சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன.
இந்த தடத்தில் கொளத்துார், ஸ்ரீனிவாசாநகர், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் எம்.டி.எச்., சாலை மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதையில் அமைகின்றன.
இப்பணிக்காக, அப்பகுதியின் முக்கிய பேருந்து நிறுத்தமான நாதமுனி பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது. இதனால் வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வியாபாரி கிட்டு கூறியதாவது:
சென்னையில் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் ஒன்று, வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்க பேருந்து நிறுத்தம். நியூ ஆவடி சாலை மற்றும் எம்.டி.எம்., சாலையை இணைக்கும் இந்த நிறுத்தத்தில், தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், பேருந்துகளை பிடிக்க காத்திருப்பர்.
இங்கு, மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது. அதற்கு பதில் 1 கி.மீ., துாரம் தள்ளி சிட்கோ நகர் நிறுத்தத்தை பயன்படுத்த வேண்டிஉள்ளது.
நிறுத்தம் அகற்றியதால், நியூ ஆவடி சாலையில் வரும் தடம் எண்கள். '71இ, 71' பேருந்துகள், காந்தி நகர் அல்லது சிட்கோ நகர் நிறுத்தங்களில் நிறுத்தப்படுகிறது. இதனால், அங்கு இறங்கி தங்கள் பகுதிக்கு வர 3 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியதாகிறது.
அதேபோல், எம்.டி.எச்., சாலையில் வரும், தடம் எண்கள் '63, 35, 48சி, 120, 48கே, 48சி' பேருந்துகள், கல்பனா நிறுத்தம் அல்லது சிட்கோ நகரில் இறங்க வேண்டும். இங்கும் 1 - 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், நாதமுனி நிறுத்தத்தை பயன்படுத்தும் பயணியர், காலையும், மாலையும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர், நாதமுனி சிக்னல்கள் அருகில் பேருந்துகளை நிறுத்தி, பயணியரை -ஏற்றிச்செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.