/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விழும் அபாயத்தில் மூன்று மின்கம்பங்கள்
/
விழும் அபாயத்தில் மூன்று மின்கம்பங்கள்
ADDED : அக் 24, 2024 12:16 AM
-
அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வாநகர் விரிவு 4வது தெருவில், உயர் அழுத்த கம்பி வழியாக, மின் இணைப்பு இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், தரை வழி மின்கேபிள் பதித்து இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், மூன்று மின்கம்பங்கள் அதோடு இணைத்த மின்கம்பிகளை அகற்ற வேண்டும். இரண்டு ஆண்டு ஆகியும், கம்பங்களை அகற்றவில்லை. பிடிமானம் இல்லாமல் நிற்பதால், பலத்த காற்றடித்தால் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மழையின்போது, தெருவில் நடக்கும்போது, கம்பத்தை பார்த்து அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. ஆபத்தை உணர்ந்து, பயன்பாடு இல்லாத கம்பங்களை அகற்ற, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அமுதா, 45,
வேளச்சேரி

