புகார் பெட்டி :பராமரிப்பில்லாத கோவில்பதாகை சுடுகாடு
புகார் பெட்டி :பராமரிப்பில்லாத கோவில்பதாகை சுடுகாடு
ADDED : டிச 17, 2024 12:13 AM

அ நிறம் | அளவு
பராமரிப்பில்லாத கோவில்பதாகை சுடுகாடு
ஆவடி மாநகராட்சி, 12வது வார்டு, கோவில்பதாகை, கலைஞர் நகர் 18வது தெருவில் மாநகராட்சி சுடுகாடு உள்ளது. 30 சென்டில் உள்ள இந்த சுடுகாட்டை, கோவில்பதாகை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போதுமான பராமரிப்பு இல்லாததால், எரிமேடை, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, கேட் துருப்பிடித்து, சுடுகாட்டில் கருவேல மரங்கள் வளர்ந்து காட்சியளிக்கிறது. இதனால், இறுதி சடங்கு செய்யும் பகுதிவாசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இரவு வேளைகளில், சமூக விரோதிகளின் மதுக்கூடமாக மாறுகிறது. இது குறித்து, பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- ஜான் சேவியர், ஆவடி.
