sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.1.60 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை குமரி வாலிபர் மீது திருவொற்றியூரில் புகார்

/

ரூ.1.60 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை குமரி வாலிபர் மீது திருவொற்றியூரில் புகார்

ரூ.1.60 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை குமரி வாலிபர் மீது திருவொற்றியூரில் புகார்

ரூ.1.60 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை குமரி வாலிபர் மீது திருவொற்றியூரில் புகார்


ADDED : ஜூலை 20, 2025 11:44 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:மனைவியிடம் 1.60 கோடி ரூபாய், 7 சென்ட் நிலம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்திய, கன்னியாகுமரி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் ரேச்சல், 32. இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரிய ஜோஸ் சாஜின், 34, என்பவருக்கும், 2023 ஜன., 2ம் தேதி நாகர்கோவிலில் திருமணம் நடந்துள்ளது.

ஹாங்காங்கில், வங்கி மேலாளராக பணியாற்றும் மரிய ஜோஸ் சாஜின், திருமணமான ஒரு மாதம் கன்னியாகுமரியில் இருந்துள்ளார். பின், மனைவியுடன் ஹாங்காங் சென்று விட்டார்.

இதற்கிடையில், வரதட்சணையாக, மாப்பிள்ளை வீட்டாருக்கு 215 சவரன் தங்க நகைகள், 10 லட்ச ரூபாய் மற்றும் 'ஹூண்டாய் வென்யூ' கார் உள்ளிட்டவை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹாங்காங்கில் வசித்த மரிய ஜோஸ் சாஜின், தன் மனைவியிடம், 1.60 கோடி ரூபாய் மற்றும் ஏழு சென்ட் நிலம் கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

கடந்தாண்டு, ஜூன் 13ம் தேதி, ஹாங்காங்கில் இருந்து அப்பெண், திருவொற்றியூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மரிய ஜோஸ் சாஜின் மற்றும் அவர் குடும்பத்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ரேச்சல் மனுதாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, திருவொற்றியூர் மகளிர் போலீசார், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us