ADDED : ஜன 25, 2024 12:24 AM
வழி நெடுகிலும் குழப்பம்
கோயம்பேடு மட்டுமின்றி, அங்கிருந்து ஆம்னி பேருந்துகள் செல்லும் வழியில் பல்வேறு நிறுத்தங்களில் பயணியர் ஏறிச் செல்வது வழக்கம். வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்துார், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்துார் ஆகிய இடங்களில் அதிகளவில் பயணியர் ஏறிச் செல்வர்.
நேற்று நகருக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது, கடைசி நேரத்தில் தான் இவர்களுக்கு தெரியவந்தது. வசதியுள்ளவர்கள், ஆட்டோ, டாக்சி வாயிலாக கிளாம்பாக்கம் சென்றனர். பலருக்கு தகவல் தெரியாமலும், ஆட்டோ, டாக்சிக்கு கட்டணம் செலுத்த வசதியற்றவர்களும் கடும் அவதிக்கு ஆளாயினர்.
குறிப்பாக, சென்னையில் தேர்வு எழுத வந்த மாணவர்கள், குழந்தைகளுடன் கன்னியாகுமரி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.