/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு
/
ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு
ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு
ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு
UPDATED : ஜன 25, 2026 06:24 AM
ADDED : ஜன 25, 2026 05:40 AM

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், அங்கிருந்து இயக்கப்பட்ட மாநகர பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக நிலையத்தில் இருந்து, நேற்று முதல் இயக்கப்படுகின்றன.
போதிய வசதி மற்றும் முறையான அறிவிப்பு இல்லாததால், பயணியர் குழப்பம் அடைந்தனர்.
சென் னை பிராட்வே பேருந்து நிலையம், 650 கோடி செலவில், வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளதால், இங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்ட புதிய தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று முதல் இயக்கப்படுகின்றன.
இதில், ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கான நுழைவாயில், அங்குள்ள மேம்பால இறக்கத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது.
நெரிசல் மிகுந்த இப்பகுதியில் பேருந்துகள் உள்ளே செல்லும்போது, அதிகளவில் விபத்து ஏற்படும் நிலை இருப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, அதற்கு தீர்வாக என்.ஆர்.டி., மேம்பாலத்தின் கீழே உள்ள அணுகு சாலை வழியாக, பேருந்து நிலையத்திற்கு செல்ல வழிவகுக்கப்பட்டது.
அந்த வகையில், நேற்று முதல் நாள் என்பதால், பாரிமுனையில் இருந்து வரும் பேருந்துகளை, இவ்வழியாக நிலையத்திற்குள் செல்ல, பேருந்து ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.
பேருந்துகள் வெளியேறும்போது, இப்ராஹிம் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி, பேருந்துகள் இயக்கப்பட்டன.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
மொத்தம் 700க்கும் மேற்பட்ட பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தலா 50 சதவீதமாக பிரித்து, பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வருகிறோம். பேருந்துகளை தடையின்றி இயக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
விடுமுறை நாட்கள் என்பதால், பெரிய அளவில் நெரிசல் இல்லை. அலுவலக நாட்களில் தான், உண்மை நிலவரம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

