sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்., நிர்வாகி கைது

/

கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்., நிர்வாகி கைது

கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்., நிர்வாகி கைது

கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்., நிர்வாகி கைது


ADDED : ஜூலை 24, 2025 12:25 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சாலை அமைப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்கிரஸ் நிர்வாகி அப்ரோஸை, போலீசார் கைது செய்தனர்.

வேப்பேரி, சடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் அப்ரோஸ்; இவர் காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் சட்ட பிரிவில் மாநில செயலர்.

அவரது வீடு அமைந்துள்ள தெருவில், சாலை மிகவும் மோசமாக உள்ளதால், அவற்றை சீரமைக்கும்படி, 58வது வார்டு உதவி பொறியாளரிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.

இது சம்பந்தமாக பேச்சில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அப்ரோஸ், மாநகராட்சி உதவி பொறியாளரை மிரட்டி உள்ளார். இதுகுறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் பெரியமேடு காவல் நிலையத்திலும், அப்ரோஸ், உதவி பொறியாளர் மீது வேப்பேரி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், தன் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, போலீஸ் கமிஷனர் அருணுக்கு கருப்பு கொடி காட்ட, அப்ரோஸ் முயன்றார்.

அவரை, வேப்பேரியில் போலீசார் வழிமறித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்ரோஸ், வேப்பேரி காவல் நிலைய பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us